Wednesday, October 13, 2010

சீன வைரஸ்(stuxnet).... இந்தியாவுக்கு ஆபத்து!

சீன வைரஸ்.... இந்தியாவுக்கு ஆபத்து!

அவ்வப்போது ஏதாவது ஒரு வைரஸால், கம்ப்யூட்டர்கள் செயலிழப்பது வாடிக்கை.

பிடிக்காத நிறுவனத் தின் கம்ப்யூட்டர்களைசெய லிழக்கச் செய்து, அவர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் வைரஸ்கள் ஏவப் பட்டன. இப்போது இந்த வைரஸ்கள், ஒரு நாட்டின் மீது மறைமுகப் போர் நடத்தும் அளவுக்கு அசுர ஆயுதங்களாக வளர்ச்சிஅடைந்து உள்ளன! இந்தியாவுடன் பகைமை பாராட்டும் சீனா, தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் இந்தியாவை நிலை குலையச் செய்யும் நடவடிக் கையில் இறங்கி இருப்பதாக, ஓர் அதிர்ச்சித் தகவல் வந்திருக்கிறது. ''சீனா அனுப்பிய கம்ப்யூட்டர் வைரஸ், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உள்ளேயேபுகுந்து, ஆட்டிப் படைத்து உள்ளது. இதனால்தான், கடந்த ஜூலையில் தொலைக்காட்சி மற்றும்தொலைத்தொடர்பு சேவைக்காக விண்ணில் செலுத்தப்பட்ட இன்சாட் 4-பி செயற்கைக் கோள் எங்கே இருக்கிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது!'' என்று அறிவியல் அதிகாரிகள் மத்தியில் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் பிரபல இணைய வல்லுநரான ஜெஃப்ரி இந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். ''இந்திய அரசின் இணையதளங்களைக் குறிவைத்து, இந்த வைரஸ் தாக்குதல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் சீன அரசு இருக்கும் என்று கருதுகிறேன். இது தொடர்பான மேலும் பல விவரங்களை டிசம்பரில் சென்னையில் நடக்க உள்ள 'நேஷனல் அசோசி யேஷன் ஆஃப் சாப்ஃட்வேர் அண்ட் சர்வீசஸ் கம்பெனி (நாஸ்காம்)' மாநாட்டில் அளிக்க உள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் இன்சாட் 4-பி செயற்கைக்கோளின் செயல்பாடுகள் தடைபட்டதன் பின்னணியில், இந்த வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது!'' என்று சொல்லித் திடுக்கிடவைத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் அந்த கம்ப்யூட்டர் வைரஸின் பெயர், 'ஸ்டக்ஸ்நெட்'. பென் டிரைவ் மூலம் கம்ப்யூட்டர்களில் செலுத்தப்பட்ட இந்த வைரஸ்கள், முதலில் கம்ப்யூட் டரைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து, தொழிற்சாலையின்செயல் பாடுகள் மற்றும் கட்டுப் பாட்டு அமைப்பைநிலை குலையச் செய்யும்வகையில் உருவாக்கப்பட்டு உள்ள தாம். தற்போது, இதை ஒழிக்கும் நடவடிக்கையில் நம் நிறுவனங்கள் இறங்கி உள்ளன. இதில், சீமென்ஸின் ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேருக்கு ஓரளவு வெற்றி கிடைத்து உள்ள தாம். இஸ்ரோ உட்பட பல இந்திய அரசு நிறுவனங்கள், இந்த ஆன்டி-வைரஸைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன.

சீனாவின் ஸ்டக்ஸ்நெட் வைரஸால் இந்தோனேஷியா, இந்தியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன. ஈரான் மற்றும் இந்தோனேஷியாவில் 73 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிப்பு அடைந்தன. ''இந்தியாவில் இதன் பாதிப்பு 86 ஆயிரம் கம்ப்யூட்டர்களாக இருக்கலாம்...'' என்று ரஷ்யாவின் kasperskyஆன்டி-வைரஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்தது. ஆனால், ''6,000 கம்ப்யூட்டர் கள்தான் பாதிக்கப்பட்டு உள்ளன!'' என நம்முடைய அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இந்த வைரஸால் ஈரான் அதிக அளவில் பாதிக்கப் பட்டதால், அந்த நாடு உருவாக்கிவரும் அணுமின் நிலையத் திட்டத்தை நிலைகுலையச் செய்யவே இந்த வைரஸை உருவாக்கி ஏவி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது!

Friday, September 24, 2010

மண்ணின் மாண்பை காப்போம்..!!

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது,

இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே.

ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.


மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம்.

தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!