Tuesday, November 2, 2010
தமிழனின் வெற்றிக்கு உதவுவோம்!!!
Wednesday, October 13, 2010
சீன வைரஸ்(stuxnet).... இந்தியாவுக்கு ஆபத்து!
அவ்வப்போது ஏதாவது ஒரு வைரஸால், கம்ப்யூட்டர்கள் செயலிழப்பது வாடிக்கை.
பிடிக்காத நிறுவனத் தின் கம்ப்யூட்டர்களைசெய லிழக்கச் செய்து, அவர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் வைரஸ்கள் ஏவப் பட்டன. இப்போது இந்த வைரஸ்கள், ஒரு நாட்டின் மீது மறைமுகப் போர் நடத்தும் அளவுக்கு அசுர ஆயுதங்களாக வளர்ச்சிஅடைந்து உள்ளன! இந்தியாவுடன் பகைமை பாராட்டும் சீனா, தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் இந்தியாவை நிலை குலையச் செய்யும் நடவடிக் கையில் இறங்கி இருப்பதாக, ஓர் அதிர்ச்சித் தகவல் வந்திருக்கிறது. ''சீனா அனுப்பிய கம்ப்யூட்டர் வைரஸ், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உள்ளேயேபுகுந்து, ஆட்டிப் படைத்து உள்ளது. இதனால்தான், கடந்த ஜூலையில் தொலைக்காட்சி மற்றும்தொலைத்தொடர்பு சேவைக்காக விண்ணில் செலுத்தப்பட்ட இன்சாட் 4-பி செயற்கைக் கோள் எங்கே இருக்கிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது!'' என்று அறிவியல் அதிகாரிகள் மத்தியில் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் பிரபல இணைய வல்லுநரான ஜெஃப்ரி இந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். ''இந்திய அரசின் இணையதளங்களைக் குறிவைத்து, இந்த வைரஸ் தாக்குதல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் சீன அரசு இருக்கும் என்று கருதுகிறேன். இது தொடர்பான மேலும் பல விவரங்களை டிசம்பரில் சென்னையில் நடக்க உள்ள 'நேஷனல் அசோசி யேஷன் ஆஃப் சாப்ஃட்வேர் அண்ட் சர்வீசஸ் கம்பெனி (நாஸ்காம்)' மாநாட்டில் அளிக்க உள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் இன்சாட் 4-பி செயற்கைக்கோளின் செயல்பாடுகள் தடைபட்டதன் பின்னணியில், இந்த வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது!'' என்று சொல்லித் திடுக்கிடவைத்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் அந்த கம்ப்யூட்டர் வைரஸின் பெயர், 'ஸ்டக்ஸ்நெட்'. பென் டிரைவ் மூலம் கம்ப்யூட்டர்களில் செலுத்தப்பட்ட இந்த வைரஸ்கள், முதலில் கம்ப்யூட் டரைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து, தொழிற்சாலையின்செயல் பாடுகள் மற்றும் கட்டுப் பாட்டு அமைப்பைநிலை குலையச் செய்யும்வகையில் உருவாக்கப்பட்டு உள்ள தாம். தற்போது, இதை ஒழிக்கும் நடவடிக்கையில் நம் நிறுவனங்கள் இறங்கி உள்ளன. இதில், சீமென்ஸின் ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேருக்கு ஓரளவு வெற்றி கிடைத்து உள்ள தாம். இஸ்ரோ உட்பட பல இந்திய அரசு நிறுவனங்கள், இந்த ஆன்டி-வைரஸைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன.
சீனாவின் ஸ்டக்ஸ்நெட் வைரஸால் இந்தோனேஷியா, இந்தியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன. ஈரான் மற்றும் இந்தோனேஷியாவில் 73 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிப்பு அடைந்தன. ''இந்தியாவில் இதன் பாதிப்பு 86 ஆயிரம் கம்ப்யூட்டர்களாக இருக்கலாம்...'' என்று ரஷ்யாவின் kasperskyஆன்டி-வைரஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்தது. ஆனால், ''6,000 கம்ப்யூட்டர் கள்தான் பாதிக்கப்பட்டு உள்ளன!'' என நம்முடைய அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இந்த வைரஸால் ஈரான் அதிக அளவில் பாதிக்கப் பட்டதால், அந்த நாடு உருவாக்கிவரும் அணுமின் நிலையத் திட்டத்தை நிலைகுலையச் செய்யவே இந்த வைரஸை உருவாக்கி ஏவி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது!
Friday, September 24, 2010
மண்ணின் மாண்பை காப்போம்..!!
இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே.
ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம்.
தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!
Saturday, June 19, 2010
Thursday, June 17, 2010
வர்த்தக தீவிரவாதம்
அலையின் நுரையை அமுக்கிவிட்டு கறுப்பாக கரையைத் தொட்டு நிற்கிறது மெக்ஸிகோ வளைகுடா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கறுப்பு.. மகா கறுப்பு. உலக சுற்றுச் சூழலின் மீது அடர்த்தியாகப் படிந்துள்ளது இந்த பெட்ரோலியத்தின் மிச்சம்...
குற்றுயிரும் குலையுயிருமாக கரையொதுங்கும் கடற் பறவைகள், திமிங்கிலக் குட்டிகள், விதவிதமான மீன்கள்....பறவைகளும் மீன்களும் இந்த கறுப்பிலும் எண்ணெய் பிசுக்கிலும் மூச்சுத் திணறி செத்து கரையொதுங்கிக் கொண்டே இருக்கின்றன...
இன்று நேற்றல்ல... கடந்த 60 தினங்களாக நடக்கும் 'கொலை' இது. அலட்சிய அரசுகள், அக்கறையற்ற அதிபர்கள்... மோசடி அதிகாரிகள்... நேர்மையற்ற வர்த்தகர்கள்.. எல்லாருமாகச் சேர்ந்து செய்திருக்கும் பயங்கரவாதம் இது.
அப்படி என்னதான் நடந்தது?:
மெக்ஸிகோ வளைகுடாவில் கடலுக்கடியில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். கடந்த ஏப்ரல் 20ம் தேதி, அதாவது இரு மாதங்களுக்கு முன் இந்த எண்ணெய் கிணற்றின் முக்கிய இரும்புக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கசிய ஆரம்பித்தது. 11 தொழிலாளர்களும் இறந்தனர். ஆனால், அதை அப்படியே வெளியில் தெரியாமல் மூடி மறைத்துவிட்டது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்.
அதற்குள் பல மில்லியன் காலன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கலந்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக 1.47 மில்லியன் காலன் முதல் 2.52 மில்லியன் காலன் வரையிலான (1 காலன் = 3.8 லிட்டர்) எண்ணெய் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி இன்று வரை எத்தனை மில்லியன் காலன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கலந்திருக்கும் என்பதை ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்கள்...
இந்த நிமிடம் வரை எண்ணெய் கசிவு நிறுத்தப்படவே இல்லை. இன்றைய நிலவரப்படி, கடலில் கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டருக்கும் அதிகமான அடர்த்தியில் (density) கச்சா எண்ணெய் கலந்து நிற்கிறது.
ஒருநாளைக்கு 5,000 பேரல்கள்தான் கசிவதாக பிரிட்டனும், இல்லையில்லை 12,000 முதல் 20,000 லிட்டர்தான் என அமெரிக்காவும் கூறிவந்தது. ஆனால் விஞ்ஞானிகளும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தன்னிச்சையாக நடத்திய ஆய்வின் முடிவில்தான் மேற்கண்ட உண்மை தெரியவந்தது.
இந்தக் கசிவை எப்படித்தான் அடைக்கப் போகிறார்கள்.....
Monday, June 14, 2010
Shakira : Waka Waka Lyrics
You're a good soldier
Choosing your battles
Pick yourself up
And dust yourself off
Get back in the saddle
You're on the front line
Everyone's watching
You know it's serious
We are getting closer
This isn't over
The pressure is on
You feel it
But you got it all
Believe it
When you fall get up, oh oh
If you fall get up, eh eh
Tsamina mina zangalewa
Cuz this is Africa
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa
Listen to your God
This is our motto
Your time to shine
Don't wait in line
Y vamos por todo
People are raising
Their expectations
Go on and feed them
This is your moment
No hesitations
Today's your day
I feel it
You paved the way
Beleive it
If you get down get up, oh oh
When you get down get up, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
Anawa a a
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa
(Lady Singing)
Voice: Tsamina mina, Anawa a a
Tsamina mina
Tsamina mina, Anawa a a
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
Anawa a a
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa
Django eh eh
Django eh eh
Tsamina mina zangalewa
Anawa a a
Django eh eh
Django eh eh
Tsamina mina zangalewa
Anawa a a
(2x) This time for Africa
(2x) We're all Africa
Friday, June 11, 2010
World Cup Foot Ball 2010 South Africa

And please visit the URL for schedule (an excellent one!!!!)
http://www.marca.com/deporte/futbol/mundial/sudafrica-2010/calendario-english.html
Shakira's "This time for Africa"
Sunday, May 23, 2010
உசுரே போகுதே ...
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச,
அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்.......
அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி உசரம் சிருசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குதடி.....
உசுரே போகுதே ...
உசுரே போகுதே ....
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில....
ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே....
அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.
உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல....
தவியா , தவிச்சு, உசுரு தடம் கெட்டு திரியுதடி,
தைலம் குருவி என்னை தள்ளி விட்டு சிரிக்குதடி.
இந்த மம்முத கிருக்கு தீருமா?
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாருமா?
என் மயக்கத்தை தீர்த்து
வச்சி மன்னிச்சிருமா,
சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே....
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!
உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னுதெரிஞ்சிறுந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி.
இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல....
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கதுல....
விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல.....
எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல
பாம்பா... விழுதா... ஒரு பாகுபாடு தெரியல
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே
என்கட்டையும் ஒரு நாள் சாகலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள....
உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள....
சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே...
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!
உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.
அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......
உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.
அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......
-வைரமுத்து
Thursday, May 6, 2010
Six-Year-Old's Ears Save Him From Death Fall

Ming Ming was left dangling eight floors above a city street with his head stuck between the protective bars.
The youngster screamed and bawled until he caught the attention of passers-by in Yinchang, Hubei Province.
As a crowd gathered, horrified neighbours could do nothing to help until emergency services arrived.
Firemen used a hydraulic pressurised expander to force open the bars and pull the terrified child to safety.
The accident is believed to have happened after his grandfather went out on an errand and left him sleeping in the family flat.
The boy woke up alone and is thought to have fallen out of the window while looking for his grandfather.
Fire service spokesman Wang Shen described the escape as miraculous.
"He could have fallen to the ground - or have been suffocated - at any minute," he said.
Thanks to sky News
Thursday, April 29, 2010
Monday, April 19, 2010
Wednesday, April 7, 2010
என்று விடியும்....
ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்று அறிவித்தாலும் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டு ஒரே கணக்கை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் அவ்வளவுதான் அது போஸ்ட்பெய்ட்டாக இருந்தாலும் சரி. ப்ரிபெய்ட்டாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே கணக்குத்தான். சரி பண விஷயத்தை விடுவோம்.
ஆனால் கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் மட்டும் ஒரு சில நிறுவனங்கள் பரவாயில்லாமல் இருந்தது. அதில் ஒன்று ஏர்டெல் அதுவும் கூட என்னை பொருத்த வரையில் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சில பேருக்கு ஏர்டெல்லில் கூட பிரச்சனையிருப்பதாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவர்களின் சர்வீஸை பற்றி புகழ் பாடிக் கொண்டிருந்த எனக்கு அவர்கள் செய்திருந்த ஒரு விஷயம் கடும் கோபத்தை ஏற்றிவிட்டது. என்னுடய போனில் மொபைல் இண்டெர்நெட் வேலை செய்ய வில்லை அதற்காக, அவர்களுடய கஸ்டமர் கேர் நம்பரான 121க்கு போன் செய்தேன் வழக்கமான ஆட்டோமேட்டட்வாய்ஸில் ஒன்றை அழுத்து, இரண்டை அழுத்து என்று எலலாவற்றையும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தி விட்டு கடைசியாய் கஸ்டமர் கேர் ஆளிடம் பேச வேண்டும் என்று 9 ஐ அழுத்தினால், ஒரு அறிவிப்பு வ்ந்தது. இனி பேசும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு 50 பைசா கணக்கில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்புதான்.
ஒரு கஸ்டமருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால்தான் போன் செய்யப்போகிறான் அப்படி பிரச்சனையை சொல்லவே காசு பிடுங்க ஆரம்பித்தால் என்ன நியாயம்?. பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது. இதை விடக்கூடாது என்று மேற்கொண்ட காலை தொடர்ந்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு பின் ஒரு கஸ்டமர் கேர் ஆள் லைனில் வர, எப்படி நீங்கள் சர்வீஸ் கால்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் அதுவும் உங்கள் நெட்வொர்க் போனிலிருந்து கூப்பிடும் போதே? என்று கேட்ட போது கொஞ்சமும் பதட்டப்படாமல் “ஆமாம் மாற்றி ஒரு மாதமாகிவிட்டது. “ என்றார் எதிர்முனை.
இது பற்றி நீங்கள் எங்களுக்கு அறிவித்தீர்களா..? கண்ட கருமாந்திரத்துக்கெல்லாம் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறீர்களே.. இதையும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி தொலைத்திருக்கலாமில்லையா..?” என்றேன் கோபத்தோடு. எதிர்முனை இன்னமும் அமைதியாய் “அறிவித்தாகிவிட்டது சார். பேப்பரில் சின்ன விளம்பரம் போட்டோமே..?” என்றார். எனக்கு இன்னும் கோபம் ஏறிவிட்டது “புது ஆபர்.. விலை ஏறுகிறது என்றால் பத்து தடவை sms அனுப்புகிறீர்கள். இம்மாதிரியான விஷயஙக்ளுக்கு மகக்ளிடம் எதிர்ப்பு வரும் என்பதால் பேப்பரில் சின்ன விளம்பரமா..?” என்றதும் “சார். நாங்க டிராய்(TRAI - Telecom Regularity authority of India) கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் செய்யறோம்.” என்றார்.
எனக்கு இன்னும் பிரஷர் எகிறியது. டிராயின் ரூல்ஸ் என்ன தெரியுமா.? வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடய சர்வீஸிலோ, அல்லது அதற்கான பண விஷயமோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு வாடிக்கையளர்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்ற ரூல்ஸ் இருக்கிறது என்று சொன்னதும். “இருங்க காலை என் ஆபீஸருக்கு மாற்றுகிறேன்” என்று என் லைனை ஹோல்ட் செய்யும் முன், “சார்.. 198 என்று ஒரு நம்பருக்கு போன் செய்தால் அதற்கு டோல் ப்ரீதான் என்றார்.
டிரான்ஸ்பர் செய்த கால் கட் செய்யப்பட்டது.இவர்களுடய சர்வீசை குறை சொல்ல எனக்கு செலவு. அடுத்து 198க்கு போன் செய்தால் எடுத்தவுடன் அவர்களும் ஆட்டோமேட்டட் வாய்ஸில் நம்பர் அழுத்த சொல்லி மேலும் விவரஙக்ளுக்கு 121 ஐ காண்டேக்ட் செய்ய சொல்கிறார்கள். மறைமுகமாய் மீண்டும் அதே நம்பருக்கு அழைக்கச் சொல்லி பணம் பிடுங்கவே முயல்கிறார்கள். அதையும் தாண்டி வெயிட் செய்து கஸ்டமர் கேர் ஆளிடம் பேசிய போது இது டோல் ப்ரீதான் சார். அந்த நம்பரை பற்றி பேச நீஙக் அந்த நம்பரில் போன் செய்து கம்ப்ளெயிண்ட் செய்யுங்க்ள் என்றார். இங்கு பேசிய பிரகஸ்பதி.
எப்படியெலலாம் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களை கேட்க ஆளேயில்லையா..? ஏற்கனவே இருக்கும் ஸ்கிமை விட இன்னும் குறைந்த விலையில் ஸ்கீம் மாற்றினாலும் நாமாக கேட்டாலே ஒழிய அவர்கள் சொலல் மாட்டார்கள். வந்த வரைக்கும் லாபம் தானே. இப்படி கொள்ளையடிப்பதையே வழக்கமாய் கொண்டவர்களூக்கு கஸ்டமர் கேருக்கு போன் செய்பவர்களுக்கு சார்ஜ் செய்துவிட்டால் பிறகு எவனும் போனே செய்ய மாட்டான். கேள்வி எதுவும் கேட்க மாட்டான், அப்படியே கேட்டாலும் காசு கட்ட வேண்டும் என்று திரும்ப திரும்ப போன் செய்ய மாட்டான் என்று நினைக்கிறார்கள் போலும். இதை பற்றி ட்ராயும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.
என்னால் முடிந்த்து அதே ஏர்டெல் 121க்கு STOP CHARGING FOR CUSTOMER CARE என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறேன். இதுவரை ஒரு பத்து மெசேஜ் அனுப்பியுள்ளேன். நீங்களும் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளராய் இருந்தால் உடனே 121க்கு SMS அனுப்புங்கள். இது டோல் ஃப்ரி நம்பர் தான். ஏதோ என்னால் ஆன ஒரு சிறு எதிர்ப்பு.
மேலும் இது தொடர்பாக TRAI க்கு புகார் அனுப்ப,
http://www.trai.gov.in/ConsumerInterest.asp
என்ற id ஐ பயன் படுத்தவும்.
Disc:
1. பாரதி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆப்ரிக்கன் கம்பெனியை விலைக்கு வாங்கியது.
2. பாரதி ஏர்டெல் நிறுவன chairman சுனில் மிட்டல், இந்தியாவின் ஆறாவது கோடீஸ்வரர்.
Tuesday, April 6, 2010
Countries and Capitals
Albania - Tirane
Algeria - Algiers
Andorra - Andorra la Vella
Angola - Luanda
Antigua and Barbuda - Saint John's
Argentina - Buenos Aires
Armenia - Yerevan
Australia - Canberra
Austria - Vienna
Azerbaijan - Baku
The Bahamas - Nassau
Bahrain - Manama
Bangladesh - Dhaka
Barbados - Bridgetown
Belarus - Minsk
Belgium - Brussels
Belize - Belmopan
Benin - Porto-Novo
Bhutan - Thimphu
Bolivia - La Paz (administrative); Sucre (judicial)
Bosnia and Herzegovina - Sarajevo
Botswana - Gaborone
Brazil - Brasilia
Brunei - Bandar Seri Begawan
Bulgaria - Sofia
Burkina Faso - Ouagadougou
Burundi - Bujumbura
Cambodia - Phnom Penh
Cameroon - Yaounde
Canada - Ottawa
Cape Verde - Praia
Central African Republic - Bangui
Chad - N'Djamena
Chile - Santiago
China - Beijing
Colombia - Bogota
Comoros - Moroni
Congo, Republic of the - Brazzaville
Congo, Democratic Republic of the - Kinshasa
Costa Rica - San Jose
Cote d'Ivoire - Yamoussoukro (official); Abidjan (de facto)
Croatia - Zagreb
Cuba - Havana
Cyprus - Nicosia
Czech Republic - Prague
Denmark - Copenhagen
Djibouti - Djibouti
Dominica - Roseau
Dominican Republic - Santo Domingo
East Timor (Timor-Leste) - Dili
Ecuador - Quito
Egypt - Cairo
El Salvador - San Salvador
Equatorial Guinea - Malabo
Eritrea - Asmara
Estonia - Tallinn
Ethiopia - Addis Ababa
Fiji - Suva
Finland - Helsinki
France - Paris
Gabon - Libreville
The Gambia - Banjul
Georgia - Tbilisi
Germany - Berlin
Ghana - Accra
Greece - Athens
Grenada - Saint George's
Guatemala - Guatemala City
Guinea - Conakry
Guinea-Bissau - Bissau
Guyana - Georgetown
Haiti - Port-au-Prince
Honduras - Tegucigalpa
Hungary - Budapest
Iceland - Reykjavik
India - New Delhi
Indonesia - Jakarta
Iran - Tehran
Iraq - Baghdad
Ireland - Dublin
Israel - Jerusalem*
Italy - Rome
Jamaica - Kingston
Japan - Tokyo
Jordan - Amman
Kazakhstan - Astana
Kenya - Nairobi
Kiribati - Tarawa Atoll
Korea, North - Pyongyang
Korea, South - Seoul
Kosovo - Pristina
Kuwait - Kuwait City
Kyrgyzstan - Bishkek
Laos - Vientiane
Latvia - Riga
Lebanon - Beirut
Lesotho - Maseru
Liberia - Monrovia
Libya - Tripoli
Liechtenstein - Vaduz
Lithuania - Vilnius
Luxembourg - Luxembourg
Macedonia - Skopje
Madagascar - Antananarivo
Malawi - Lilongwe
Malaysia - Kuala Lumpur
Maldives - Male
Mali - Bamako
Malta - Valletta
Marshall Islands - Majuro
Mauritania - Nouakchott
Mauritius - Port Louis
Mexico - Mexico City
Micronesia, Federated States of - Palikir
Moldova - Chisinau
Monaco - Monaco
Mongolia - Ulaanbaatar
Montenegro - Podgorica
Morocco - Rabat
Mozambique - Maputo
Myanmar (Burma) - Rangoon (Yangon); Naypyidaw or Nay Pyi Taw (administrative)
Namibia - Windhoek
Nauru - no official capital; government offices in Yaren District
Nepal - Kathmandu
Netherlands - Amsterdam; The Hague (seat of government)
New Zealand - Wellington
Nicaragua - Managua
Niger - Niamey
Nigeria - Abuja
Norway - Oslo
Oman - Muscat
Pakistan - Islamabad
Palau - Melekeok
Panama - Panama City
Papua New Guinea - Port Moresby
Paraguay - Asuncion
Peru - Lima
Philippines - Manila
Poland - Warsaw
Portugal - Lisbon
Qatar - Doha
Romania - Bucharest
Russia - Moscow
Rwanda - Kigali
Saint Kitts and Nevis - Basseterre
Saint Lucia - Castries
Saint Vincent and the Grenadines - Kingstown
Samoa - Apia
San Marino - San Marino
Sao Tome and Principe - Sao Tome
Saudi Arabia - Riyadh
Senegal - Dakar
Serbia - Belgrade
Seychelles - Victoria
Sierra Leone - Freetown
Singapore - Singapore
Slovakia - Bratislava
Slovenia - Ljubljana
Solomon Islands - Honiara
Somalia - Mogadishu
South Africa - Pretoria (administrative); Cape Town (legislative); Bloemfontein (judiciary)
Spain - Madrid
Sri Lanka - Colombo; Sri Jayewardenepura Kotte (legislative)
Sudan - Khartoum
Suriname - Paramaribo
Swaziland - Mbabane
Sweden - Stockholm
Switzerland - Bern
Syria - Damascus
Taiwan - Taipei
Tajikistan - Dushanbe
Tanzania - Dar es Salaam; Dodoma (legislative)
Thailand - Bangkok
Togo - Lome
Tonga - Nuku'alofa
Trinidad and Tobago - Port-of-Spain
Tunisia - Tunis
Turkey - Ankara
Turkmenistan - Ashgabat
Tuvalu - Vaiaku village, Funafuti province
Uganda - Kampala
Ukraine - Kyiv
United Arab Emirates - Abu Dhabi
United Kingdom - London
United States of America - Washington D.C.
Uruguay - Montevideo
Uzbekistan - Tashkent
Vanuatu - Port-Vila
Vatican City (Holy See) - Vatican City
Venezuela - Caracas
Vietnam - Hanoi
Yemen - Sanaa
Zambia - Lusaka
Zimbabwe - Harare
Monday, April 5, 2010
Stop Using Google Buzz
கூகல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பஸ்ஸ் எனும் சோசியல் வசதியில் ஒரு மிகப்பெரிய தவறு இருந்ததை பஸ்ஸ் அறிமுகமான இரண்டாம் நாளே கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
என்ன தான் தவறு அது?
கூகல் பஸ்ஸ் என்பது ஒருவகையில் Orkut போன்ற ஒரு சோசியல் தளம் போன்றது. Twitter & Facebook போன்ற பிரபலமான தளங்களின் சில வசதிகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது தான் இந்த பஸ்ஸ்.
நீங்கள் யார் யாருக்கெல்லாம் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புகிறீர்களோ அவர்கள் உங்களின் நண்பர்களாக பஸ்ஸ் இணைத்துவிடும். நீங்கள் உங்களின் மேல் அதிகாரி அல்லது நண்பர்களுடன் அதிகமாக சாட்டிங் செய்திருந்தால் அவர்களும் உங்களின் பஸ்ஸ் நண்பர்களாகி விடுவர்.
உங்களின் பஸ்ஸ் நண்பர்களின் முழு மின்னஞ்சல் முகவரி பிற அனைத்து பஸ்ஸ் நண்பர்கள் ஆனவருக்கும் தெரிந்துவிடும்.
பிரச்சனையின் தீவிரம் இப்போது உங்களுக்கு புரியலாம். பஸ்ஸ் உங்களின் அனுமதி கேட்காமலே உங்களுக்கு யார் எல்லாம் நண்பர்களாக இருக்கலாம் மற்றும் உங்களை யார் எல்லாம் நண்பராக்கிக் கொள்ளலாம் என தன்னிச்சையாக முடிவு எடுக்கும்.
அவர்களின் மின்னஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரிவித்துவிடும்.
பஸ்ஸ் ன் செயல்பாடுகளினை நிறுத்த, settings\buzz என்ற பக்கத்தை திறந்து “Disable Google Buzz” என்ற சிவப்பு நிற வாசகத்தை Click செய்து அடுத்து வரும் குறும் ஜன்னலில் Also unfollow me from anyone I am following in Buzz, Google Reader, and other Google products. என்பதை டிக் செய்து பின் “Yes, Delete My profile and posts” என்ற பட்டனை அழுத்தவும்.
Tuesday, March 30, 2010
New Era in Particle Physics


The head of the Atlas team, Fabiola Gianotti said the team is delighted.
"We got something like 40 events per second, which is the expected rate," she said.
"It's the beginning of a new era of physical exploration."
Two earlier attempts at collisions had failed.
The first beams were lost when a power supply tripped, and the second try was hampered by a problem with the new magnet protection system.
Two beams of protons began 10 days ago to speed at high energy in opposite directions around the 17-mile tunnel under the Swiss-French border at Geneva.
The beams have been pushed to 3.5 trillion electron volts, the highest energy achieved by any physics accelerator.
Scientists have now managed to force the two beams to cross, creating collisions and showers of particles.
They will continue to attempt collisions, starting a new era of scientific research.
The aim is to find the much talked-about Higgs boson particle which is thought to play a key role in the structure of the Universe, and would help scientists explain why matter has mass.
Detractors fear the collisions will create black holes that could swallow the earth.
However, the scientists say the holes will not be powerful enough to bring mankind to a premature end.
The LHC created a sensation when it was launched in 2008, with fears that it would lead to the end of the world, but technical faults put it out of action for a year.
A faulty electrical connection between two of the accelerator's magnets caused the system to fail.
It suffered another setback in November 2009 when a "bit of baguette", thought to have been dropped by a bird, fell onto machinery and caused a fault.
Conspiracy theorists had claimed the machine is aware of its own power and is deliberately breaking down to avoid the destruction of the universe.
The $10bn project has been described as the world's largest scientific experiment.
Thanks to SKY News

Friday, March 26, 2010
Thursday, January 14, 2010
சீனாவிலிருந்து வெளியேறுகிறது கூகுல்
கூகுலின் இந்த அறிவுப்பு முக்கீயத்துவம் வாய்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூகுலைப்போன்ற செலவாக்கும்மதிப்பும் மிக்க நிறுவனம் ஒரு நாட்டிலிஎருந்து வெளியேறப்போவதாக அறிவிப்பது அந்நாட்டில் எல்லாம் சரியில்லை என்று தெரிவிப்பதற்கு சமம்.
கூகுல் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அமெரிக்க அரசு இந்த பிரச்சனை தொடர்பாக சீனாவிடம் விளக்கம் கேட்டிருப்பதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பிரச்சனை தொடர்பாக கூகுல் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூகுலுக்கு ஏற்பட்டுள்ள நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
பிரச்சனை என்னவென்றால் கூகுல் உள்ளிட்ட 30 அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து சைபர் தாக்குதலுக்கு இலக்காகி இருகின்றன.இந்த தாக்குதல் குறித்து கூகுல் முழு விவரங்களையும் வெளியிடவில்லை. தாக்குதல் கூகுலின் இமெயில் சேவையான ஜி மெயிலை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாகவும் சீன அரசுக்கு எதிராக போராடி வரும் மனித உரிமை போராளிகளின் இமெயில் முகவரியை களவாடும் நோக்கத்தோடு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூகுல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் பின்னே சின அரசு இருப்பதாக கூகுல் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.ஆனால் அவ்வாறு நினைக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.
இந்த தாக்குதலை அடுத்து கூகுல் சீனாவில் இருந்து வெளியேற நேரிடலாம் என்று கூறியுள்ளது.தேடல் முடிவுகளை சீன அரசின் தணிக்கைக்கு இனியும் உட்படுத்த மாட்டோம் என்றும் கூறியுள்ளது.
இதன் பொருள் ஏற்கனவே சீன அரசின் நிர்பந்தம் காரணமாக நிறைய சமரசம் செய்து கொண்டு விட்டோம் ;இதன் பிறகும் அது சாத்தியமில்லை என்பதே.
உண்மை தான் கூகுல் சீனவில் நுழைந்த போதே அந்நாட்டு அரசின் கட்டுப்படுகளை ஏற்றுக்கொண்டு தான் செயல்படத்தொடங்கியது.அதற்கு காரணம் சீனாவுக்கும் இண்டெர்நெட்டுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது தான்.கம்யூனிச நாடான சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறையே அமலில் உள்ளது.சீனாவில் பெரிதாக கருத்த் சுதந்திரம் கிடையாது என்று கூறப்படுகிறது.அரசை எதிர்ப்பவர்கள் ஒடுக்கப்படுவதோடு மனித உரிமை ஆரவளர்களின் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டு வருவதாக பலவித புகார்கள் உண்டு.
இண்டெர்நெட் பிரபலமடைந்த பிறகு அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடவும் ஜனநாயக கருத்துக்களை வலியுறுத்தவும் இண்டெர்நெட் பேருதவியாக இருந்ததால் சீன அரசு இண்டெர்நெட் செயல்பாடுகளில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.இவை இன்னும் அமலில் உள்ளது. புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலகின் முன்னணி தேடியந்திரமாக உருவான கூகுல் உலகின் மிகப்பெரிய சந்தையான சீனாவில் காலூன்றும் திட்டத்தோடு அந்நாட்டில் செயல்படத்துவங்கியது.
அப்போது சீனாவின் அதிகாரபூர்வ கொள்கைகளுக்கு உடன்பட்டு நடக்க வேண்டும் அன்று நிபந்தனை விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டே கூகுல் அங்கு நுழைந்தது. சீன அரசை திருப்தி படுத்தும் வகையில் தேடல் முடிவுகளை தணிக்கைக்கும் உட்படுத்தியது.
கூகுலின் இந்த செயல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் சீன சந்தை மனதில்,வைத்து கூகுல் சர்வாதிகார அணுகுமுறைக்கு துணை போவதாகவும் விமரசனத்திற்கு ஆளானது.
இருப்பினும் சீனாவில் செயல்பட வேறு வழியில்லை எனபதால் கூகுல் இவற்றை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் கூகுலின் இமெயில் சேவை தாக்கப்பட்டு சீன அரசுக்கு எதிரான மனித உரிமை போராளிகளின் முகவரியை பெற முயற்சி நடந்துள்ளது.பொருத்தது போதும் என கூகுலை பொங்கி எழ வைத்துள்ளது.
Saturday, January 2, 2010
Sachin Vs Ponting
நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் தனது 38-வது சதத்தை எட்டியதோடு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11,000(தற்போது 11550) ரன்களை எட்டிய 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில் அவர் இந்திய பேட்டிங் மாஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்கு மிக அருகில் இருப்பதால், இருவரது பேட்டிங் குறித்து ஒரு ஒப்பு நோக்கு பார்வையை முன் வைக்கலாம் என்று தோன்றுகிறது.
இருவரும் ரேஸ் குதிரைகள் போல் ஒருவருக்கு ஒருவர் சாதனை படைப்பதில் சளைத்தவர்கள் அல்ல என்ற திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
சச்சின் டெண்டுல்கர் 162 டெஸ்ட் போட்டிகளில் 12,970 ரன்களைக் குவித்து 54.72 என்ற சராசரியுடன் 43 சதங்களை எடுத்துள்ளார். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 440 போட்டிகளை விளையாடியுள்ள சச்சின் 44.71 என்ற சராசரியுடன் 17,394 ரன்களைக் குவித்து அதில் 45 சதங்களை எடுத்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் 140 டெஸ்ட் போட்டிகளில் 55.26 என்ற சராசரியுடன் 11,550 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 38 சதங்களையும் 50 அரை சதங்களையும் எடுத்துள்ளார்.
ஒரு நாள் சர்வதேச பொட்டிகளில் ரிக்கி பாண்டிங் 330 போட்டிகளில் விளையாடி 12,313 ரன்களைக் குவித்து 28 சதங்களை மட்டும் எடுத்துள்ளார்.
ஒருவர் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக கருதப்படும் டான் பிராட் மேன் மண்ணில் பிறந்து வளர்ந்தவர். மற்றவர் அதே டான் பிராட்மேனால், தன்னைப் போன்று விளையாடுகிறார் என்று புகழாரம் சூட்டப்பட்டவர்.
1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானில் விளையாடச் சென்ற இந்திய அணியில் 16 வயது வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டது முதல் அவரைச் சுற்றி பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அன்று உருவாகிய அந்த எதிர்பார்ப்பு இன்றளவும் சச்சினை பொறுத்தவரை ரசிகர்களிடையே நீடித்து வருகிறது.
ஒவ்வொரு முறை சச்சின் களமிறங்கும் போதும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருப்பதனால் அவருக்கு இருந்து வரும் மன அழுத்தம் ரிக்கி பாண்டிங்கிற்கு இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும்.
அந்த பாகிஸ்தான் தொடரில் சிறப்பாக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் புகழ் இங்கிலாந்தில் மான்செஸ்டர் மைதானத்தில் 119 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்ததது முதல் உச்சத்தை எட்டியது. அடுத்ததாக பயணம் மெற்கொள்ளவிருக்கும் ஆஸ்ட்ரேலியா வரை இவரது புகழ் இங்கிலாந்து வாயிலாக சென்றடைந்தது. அங்கு இவர் சிட்னி, பெர்த் மைதானத்தில் அடித்த சதங்களை பார்வையிட்ட டான் பிராட்மேன், சச்சின் தன் பாணி ஆட்டத்தின் வாரிசு என்று அறிவித்ததையடுத்து ஆஸ்ட்ரேலியாவிலும் சச்சினின் புகழ் பெரிதும் வளர்ந்தது.
1991- 92 தொடரின் போது ஆஸ்ட்ரேலிய வானொலிக்கு ஒரு முறை பேட்டி அளித்த சச்சின் டெண்டுல்கர், பேட்டி கண்டவரிடம் குறிப்பிடும்போது, என்னைப் போலவே விளையாடும் ஒரு வீரர் உங்கள் நாட்டிலும் உள்ளார் அவர்தான் ரிக்கி பாண்டிங் என்று கூறினார்.
அப்பொழுது டாஸ்மேனியா அணிக்காக ரிக்கி பாண்டிங் ஆடிக் கொண்டிருந்தார். அவரை ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் அடையாளம் காணும் முன்னரே சச்சின் அவரை ஆஸ்ட்ரேலியர்களுக்கு அடையாளம் காட்டினார் என்றே கூறவேண்டும்.
ஆனால் அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்தே ரிக்கி பாண்டிங் ஆஸ்ட்ரேலிய அணிக்குள் நுழைய முடிந்தது. ஆனால் டெண்டுல்கருக்கு கிடைத்த அந்த பலமான வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆஸ்ட்ரேலியாவில் ஹீரோ தகுதி பெற அவர் தன்னை பெரிய அளவில் நிரூபிக்க வேண்டியிருந்தது.
பாண்டிங் 1995ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தன் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார். அதில் முதல் இன்னிங்சில் 96 ரன்களையும், 2-வது இன்னிங்சில் 71 ரன்களையும் எடுத்து தன் வரவை அறிவித்தார்.
ஆனால் இவரது ஆட்டம் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு விதமான ஷாட்களையும் கொண்டிராமல், ஒரு மரபான பேட்ஸ்மென் என்ற அளவிலேயே சிறப்பாக அமைந்தது. இவரும் சச்சின் டெண்டுல்கர் போலவே இங்கிலாந்து அணிக்கு எதிராக 1997ஆம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் 127 ரன்கள் எடுத்து தன் முதல் சதத்தை எட்டினார்.
ஆனால் 1997ஆம் ஆண்டுவாக்கில் பாண்டிங்கை யாரும் சச்சினுடன் ஒப்பிட்டு பேச மாட்டார்கள். ஏனெனில் அப்போது சச்சினும், மேற்கிந்திய மேதை பிரையன் லாராவும் உலக பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.
1994ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் கொடி கட்டி பறந்த காலமாகும். இந்த காலக்கட்டத்தில் 125 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய சச்சின் டென்டுல்கர் சுமார் 8 ஆண்டுகள் ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைகளில் முதலிடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டிங் தன் முதல் சதத்தை 1997ஆம் ஆண்டு அடிப்பதற்குள் சச்சின் டெண்டுல்கர் 10 சதங்களை அடித்து கிளென் மெக்ரா, கூட்னி வால்ஷ், கர்ட்லி ஆம்புரோஸ், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஆலன் டொனால்ட், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன் என்று அனைத்து சிறந்த பந்து வீச்சாளர்கள் மத்தியிலும் பேட்டிங்கில் தன்னை சூரப்புலி என்று நிரூபித்துக் கொண்டிருந்தார்.
1995ஆம் ஆண்டு துவங்கிய பாண்டிங் 2001ஆம் ஆண்டின் புகழ் பெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு வரும்போது 7 சதங்களை மட்டுமே எடுத்திருந்தார். அந்த தொடர் அவருக்கு பெரும் சரிவாக அமைந்தது. 0, 6, 0,0, 11 என்று பாண்டிங் மிக மோசமாக ரன் எடுத்ததோடு ஹர்பஜன் சிங்கின் 'செல்லப் பிள்ளை" (அதாவது ஹர்பஜன் வீசினால் பாண்டிங் அவுட் என்று பொருள்) ஆனார் பாண்டிங்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர், 1997ஆம் ஆண்டு டெய்லர் தலைமையில் ஆஸ்ட்ரேலியா இங்கு வந்த போது, ஷேன் வார்ன் ஒருவர்தான் தனது கிரிக்கெட் வாழ்விற்கு அச்சுறுத்தல் என்பதைக் கணித்து எல்.சிவராம கிருஷ்ணன், ரவி சாஸ்திரி ஆகியோரை பந்து வீசச் செய்து கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். அந்த பயிற்சியின் பலன் ஷேன் வார்ன் பின்பு ஒரு முறை குறிப்பிட்டது போல் 'இரவு கண் மூடினால் சச்சின் டெண்டுல்கர் என்னை அடித்து நொறுக்கியதுதான் கண் முன் வருகிறது' என்றவாறு அமைந்தது.
இதே போல் ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை, அதுவும் சிறந்த பந்து வீச்சாளரை குறி வைத்து தாக்கி ஆதிக்கம் செலுத்தியதாக நாம் பாண்டிங்கிடம் காண முடியாது. நம் விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளரை அடித்து நொறுக்கும் பழி தீர்க்கும் மனோ நிலை எல்லா வீரர்களிடத்திலும் இருக்கும் என்றாலும் சச்சின் டெண்டுல்கர் விஷயத்தில் இது வெளிப்படையாக இருந்தது.
ஸ்ட்ரைக் ரேட் என்ற அளவில் பார்த்தால் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இவ்வளவு ஷாட்களை குறைத்தும் 85 விழுக்காடு என்று வைத்துள்ளார். பாண்டிங் 80 விழுக்காடு மட்டுமே வைத்துள்ளர். டெஸ்ட் போட்டி ஸ்ட்ரைக் ரேட் விகிதத்திலும் சச்சினுக்கும், பாண்டிங்கிற்கும் பெரிய வேறுபாடு இருந்ததில்லை.
ஆனால் பேட்டிங் பாணி என்று எடுத்துக் கொண்டால் இப்போது சச்சின் விளையாடும் முறையை நீக்கி விட்டு பார்த்தால் அதிரடி முறையில் விளையாடும் வீரர் சச்சினாகவே இருப்பார். மேலும் சச்சின் அவரது உச்சக் கட்ட அதிரடி பேட்டிங் காலத்தில் விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன் ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டார். எதிரணியினரின் ஓய்வறை விவாதங்களில் சச்சினை எப்படி வீழ்த்துவது என்பதே பெரிதும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டதுண்டு. பாண்டிங் பற்றி எதிரணியினர் அவ்வளவாக கவலைப்பட்டதில்லை ஏனெனில் அப்போது ஹெய்டன், லேங்கர், கில்கிறிஸ்ட் என்று அதிரடி வீரர்கள் ஆஸ்ட்ரேலிய அணியில் இருந்தனர்.
2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரை சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்கம் ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கொடி கட்டிப் பறந்தது. அதன் பிறகு காயம் காரணமாக பல்வேறு தொடர்களில் அவர் விளையாட முடியாமல் போனது. கிரிக்கெட் வாழ்வை அச்சுறுத்தும் 'டென்னிஸ் எல்போ' என்ற முழங்கை காயத்தில் சிக்கினார் சச்சின் டெண்டுல்கர். அந்த காயத்திற்கு பிறகு அவர் நிறைய ஷாட்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. குறிப்பாக அவரது பயங்கரமான புல் ஷாட்கள், ஹுக் ஷாட்கள், சில வகையான ஸ்லாக் ஸ்வீப் ஷாட்கள், ஸ்பின்னர்களை மேலேறி வந்து அடிக்கும் ஷாட்கள், வேகப்பந்து வீச்சாளர்களை அனாயசமாக எதிரே நிற்கும் சைட் ஸ்க்ரீனிற்கு மேல் தூக்கி சிக்சர் அடிக்கும் பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தும் ஷாட்களை அவர் அதிகம் பயன்படுத்த முடியாமல் போனது.
இதனால் வேகமாக ரன் குவிக்கும் தன்மையும் நாளடைவில் குறைந்தது. அவர் அப்படியே தலைகீழாக தன் ஆட்டத்தை மாற்றிக் கொண்டு காயத்தை தவிர்க்கும், ஆனால் ரன் குவிப்பு வேகமும் குறையாத வகையில் சில புதிய ஷாட்களை (உதாரணமாக பெடல் ஷாட்) அவர் கண்டு பிடித்துக் கொண்டார். அதே போல் பவுன்சர் பந்துகளை ஸ்லிப் திசையில் மேல் தூக்கி அடிக்கும் ஷாட் அவரது முத்திரை ஷாட்டாகவே சமீபமாக இருந்து வருகிறது.
பாண்டிங் 2003ஆம் ஆண்டு மெல்போர்னில் செளரவ் கங்கூலி தலைமை இந்திய அணிக்கு எதிராக 257 ரன்களை எடுத்த பிறகு... சொன்னால் நம்ப முடியாது... அதாவது 26 டிசம்பர் 2003-ற்கு பிறகு பாண்டிங் ஜனவரி 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக 205 ரன்கள் எடுத்தார். இடையில் பாண்டிங் 12 மாதங்கள் எந்த ஒரு சதத்தையும் எடுக்கவில்லை.
சச்சின் டெண்டுல்கருக்கு அவரது உச்ச கட்ட பேட்டிங் காலத்தில் சதங்களுக்கு இடையே இவ்வளவு நீண்ட இடைவெளி இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டிங்கின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் வரைபடம் 2004ஆம் ஆண்டிற்கு பிறகே முன்னேற்றப் பாதையில் சென்றுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட வரைபடம் 2004ற்கு பிறகு சற்றே பின்னடைந்துள்ளது.
ஆஸ்ட்ரேலிய வீரர்களில் எவரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகே சிறப்பின் உச்சத்திற்கு செல்வர். இதனை நாம் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், மார்க் டெய்லர், டேவிட் பூன் ஆகியோரது புள்ளி விவரங்களைப் பார்த்தால் தெரியும்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு, அதாவது ஒரு 8 ஆண்டுகளில் பேட்டிங்கில் நிகழ்த்திய ஆதிக்கம் என்பது போல் ரிக்கி பாண்டிங்கிற்கு கூற முடிவதில்லை. மேலும் ரிக்கி பாண்டிங் சர்வதேச அரங்கில் கிளென் மெக்ரா, ஷேன் வார்ன் ஆகியோரது பந்து வீச்சை எதிர்கொள்ளவில்லை.
சச்சின் டெண்டுல்கரை நம்பி, அதாவது இந்தியா என்றால் சச்சினின் விக்கெட் எடுத்தால் போதுமானது என்று ஒரு காலக் கட்டம் இருந்தது. இது அவரது பேட்டிங்கை சிறிது பாதிக்கக் கூடச் செய்தது. ஆனால் இத்தைய நெருக்கடி பாண்டிங்கிற்கு ஏற்பட்டதில்லை. அவர் எப்போதும் அவரை விடவும் சிறந்த வீரர்களின் பாதிகாப்பிலேயே இருந்தார். இதனால் அவரது ஆட்டம் அழுத்தம் காரணமாக பாதிக்கப்ப்டவில்லை.
எப்போதும் ஒரு டெஸ்ட் இல்லையென்றால் இன்னொரு டெஸ்டில் சாதிக்கலாம் என்ற அவகாசம் பாண்டிங்கிற்கு இருந்தது. ஆனால் இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் விக்கெட் விழுந்தால் அதன் பிறகு தோல்வியடையும் என்ற நிலை ஒரு காலக்கட்டம் வரை இருந்தது. அதாவது ராகுல் திராவிட், கங்கூலி, லக்ஷ்மண் ஆகியோர் சிறப்பாக விளையாடும் வரையில், 2001ஆம் ஆண்டு கங்கூலி தலைமை இந்திய அணி ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்ட்ரேலிய அணியை வீழ்த்திய போது திராவிட், லக்ஷ்மண் ஆகியோர் உலக அரங்கில் மிகப்பெரிய பேட்ஸ்மென்களாக எழுச்சி பெறும் வரை இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மீதான சுமை அதிகமாகவே இருந்து.
இத்தகைய சுமைகளை பாண்டிங் தான் கேப்டனாகும் வரை சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படவில்லை. மேலும் தோல்விகளையே பெரும்பாலும் சந்தித்து வந்த இந்திய அணியில் 88 சதங்களையும், சுமார் 30,000+ ரன்களையும் குவித்து, சீரான போக்கில் தன் ரன்களை எடுக்கும் ஒரு வீரர் உருவாகியுள்ளார் என்றால் அது சச்சின் டெண்டுல்கரின் தனிப்பட்ட சாதனைதான்.
ஆஸ்ட்ரேலியாவில் மிகச்சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு உள்ளது. அதில் ஒருவர் 8 ஆண்டுகள் விளையாடினாலே 5 ஆண்டுகளுக்கான சர்வதேச அனுபவம் பெற்றதற்கு சமம். ஆனால் ஒரு அதிவேகப்பந்து வீச்சாளர் கூட, ஏன் ஒரு சதாரண வேகத்துடன் வீசி பேட்ஸ்மென்களை திணறச் செய்யும் பந்து வீச்சாளர்களும், சாதகமான மைதானங்களும் இல்லாத சூழலில் சச்சின் டெண்டுல்கர் உலகம் போற்றும் ஒரு வீரராக உருவாகியுள்ளார் என்பது மிகப்பெரிய சாதனைதான்.
ஆஸ்ட்ரேலியா அதன் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பின் மூலம் இன்னொரு பாண்டிங், இன்னொரு ஸ்டீவ் வாஹ் ஆகியோரை உருவாக்கி விடலாம். ஆனால் சச்சின் டெண்டுல்கர் போல் இன்னொரு வீரர் இந்தியாவில் உருவாவது கடினமே.
ஆனால் இவர்கள் இருவர் பற்றிய ஒப்பீடு தற்போதுதான் பெருகி வருகிறது. ஏனெனில் பாண்டிங் தன் முதல் சதத்தை எடுத்த போது சச்சின் 10 சதங்களை எடுத்திருந்தார். ஆனால் தற்போது பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் டெண்டுல்கரைக் காட்டிலும் 5 சதங்களே பின் தங்கியுள்ளார். மொத்த ரன்களில் 1500 ரன்களே பின் தங்கியுள்ளார். 10 சத இடைவெளி 4 சதங்களாக குறைந்திருப்பது பாண்டிங் சமீபகாலமாக விளையாடி வரும் அபார கிரிக்கெட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு.
பொதுவாக சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசிய தலை சிறந்த வீச்சாளர்கள், அதாவது ஆலன் டொனால்ட், கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், முரளிதரன், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் பலவீனம் இன்னது என்று அடையாளம் காண முடிந்ததில்லை என்றே கூறிவந்துள்ளனர்.
ஆலன் டொனால்டிடம் ஒரு முறை கேட்டபோது, சச்சின் டெண்டுல்கரை ஒரே பந்தில் இரண்டு முறை சொல்லி வைத்தாற்போல் வீழ்த்த முடியாது. ஏனெனில் தொடர்ந்து அவர் தன் ஆட்டத்தை சோதனைக்குட்படுத்தி அதில் மேம்பாடு செய்து கொண்டே செல்லும் வீரர் என்று கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது ஆக்ரோஷ, அதிரடி உச்சத்தில் இருந்தபோது அவரை சற்றே சிரமப்படுத்திய வீச்சாளர் என்றால் அது மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் கூட்னி வால்ஷ்தான். இதனை சச்சின் டெண்டுல்கர் பல முறை கூறியுள்ளார்.
ஆனால் பாண்டிங்கின் பேட்டிங் அப்படியில்லை. இன்றும் அவர் சுழற்பந்து வீச்சாளர்களை சரிவர ஆட முடிவதில்லை. மேலும் மக்காயா நிட்டினி, இந்தியாவின் இஷாந்த் ஷர்மா போன்றவரகள் வீசும் "இன் டிப்பர்' பந்துகளை சந்திப்பதில் அவருக்கு பலவீனங்கள் உள்ளது. அதனால் அவர்களிடம் அதிக முறை ஆட்டமிழந்தும் உள்ளார் பாண்டிங்.
பிரைன் லாராவை மெக்ராவும், டொனால்டும் 10 அல்லது அதற்கு மேல்பட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். பான்டிங்கை நிட்டினியும், ஹர்பஜனும் அதிக முறை வீழ்த்தியுள்ளனர். இது போன்று சச்சினை அதிக முறை ஆட்கொண்ட பந்து வீச்சாளர் ஒருவரைக் கூட நாம் குறிப்பிட முடியாது.
ஆனால் கிரிக்கெட் ஆட்டம் என்றால் அது வெறும் பேட்டிங் மட்டும் தொடர்புடையதன்று. ஃபீல்டிங், தலைமையேற்று நடத்துதலும் அதில் அடங்கும். இந்த இரண்டிலும் ரிக்கி பாண்டிங்குடன் சச்சினை நாம் ஒப்பு நோக்க முடியாது. ஏனெனில் ரிக்கி பாண்டிங் இன்றும் ஒரு மிகச்சிறந்த ஃபீல்டர், ஒரு மிகச்சிறந்த தலைவர். ஆனால் சச்சின் ஒரு தோல்வியடைந்த கேப்டன், ஆனால் ஒரு பாதுகாப்பான ஃபீல்டர் அவ்வளவே.
இருப்பினும் இவ்வளவு தகுதி இருந்தும் ஷேன் வார்ன் தன் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு முதலிடம் கொடுத்திருப்பதன் காரணம், சச்சினின் மனோதிடம், விமர்சனங்களை மீண்டும் மீண்டும் பொய்யாக்கும் சிறப்புத் திறமை, ஃபார்ம் இல்லாத நிலையிலிருந்து ஃபார்மிற்கு வரும் விதம், கடினமான மனோ நிலை, தன் விக்கெட்டை விலை மதிப்பில்லாததாக கருதும் சிறப்பு ஆகியவையே என்று கூறியுள்ளார்.
இந்த விதங்களில் பிரையன் லாரா ஒரு ஊசிமுனை அளவு குறைவாக உள்ளதால் லாராவிற்கு இரண்டாவது இடம் அளித்தார் ஷேன் வார்ன்.
லாரா ஓய்வு பெற்று விட்ட நிலையில், ஒப்பீடுகளையும், வித்தியாசங்களையும் தாண்டி சம கால கிரிக்கெட்டில் இரண்டு பேட்டிங் மேதைகள் உள்ளனர் என்றால் அது சச்சினும், பாண்டிங்கும்தான். கெவின் பீட்டர்சனை தற்போது ஆஸ்ட்ரேலியர்கள் புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால் இவர்கள் இருவருடனும் அவரை ஒப்பு நோக்கினால் அவர் இன்னமும் நீண்ட நெடுந்தொலைவு வரவேண்டியுள்ளது.